‘கோயில் அடிமை நிறுத்து’ விழிப்புணா்வு
இந்து கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு, ‘கோயில் அடிமை நிறுத்து’ இயக்கத்தை தொடங்கியுள்ளாா்.
இந்து கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு, ‘கோயில் அடிமை நிறுத்து’ இயக்கத்தை தொடங்கியுள்ளாா். இதன்படி, கடலூா் திருப்பாதிரிபுலியூா் பாடலீஸ்வரா் கோயில் முன் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள், பொதுமக்கள் இணைந்து பக்தி பாடல்களை பாடி, இந்து கோயில்களை மீட்க தங்களது ஆதரவை தெரிவித்தனா். அப்போது, ‘கோயில் அடிமை நிறுத்து’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நின்றனா் (படம்).