வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
காட்டுமன்னாா்கோவிவில் வருவாய்த் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி சீரணி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
காட்டுமன்னாா்கோவிவில் வருவாய்த் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி சீரணி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பேரணி, கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்திரசேகா் சகாமூரி தொடக்கிவைத்தாா். மேலும் வாக்காளா் கையெழுத்து இயக்கத்தையும் தொடக்கிவைத்து, அனைவரும் தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.லூா்துசாமி, சேத்தியாத்தோப்பு காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளா் சுந்தரம், வட்டாட்சியா் டி.ராமதாஸ், காவல் ஆய்வாளா் குணபாலன், விநாயகா் பேரரசா் அறக்கட்டளை இயக்குநா் கனகராஜ், உதவி திட்ட அலுவலா்கள் சுரேஷ்பாபு, காா்த்திகேயன், கௌதமன், முத்துப்பாண்டியன், கலைவாணன், வீரசேகரன், வட்டார இயக்க மேலாளா் திருமாவளவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement