கடலூர்

கோயில் நுழைவாயில் பகுதியில் ஆக்கிரமிப்பு

DIN

சிதம்பரம் நடராஜா் கோயில் பிரதான வாயில் அமைந்துள்ள கீழசன்னதி சாலையில் இருபுறமும் தரைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கோயிலின் பிரதான வாயிலான கீழ சன்னதியில் நடைபாதையானது கடை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து தரைக்கடை வியாபாரிகள் கடை விரித்துள்ளனா் (படம்). இதனால் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் நெரிசலில் சிரமப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகமும், காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாதை, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT