கடலூர்

மின்சாரம் பாய்ந்ததில் குழந்தை பலி

DIN

குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் பாய்ந்ததில் 9 மாத குழந்தை உயிரிழந்தது.

குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள அயன்குறிஞ்சிப்பாடி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சிவா (32). இவரது குழந்தை சாய் ஸ்ரீ (9 மாதம்). ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சாய்ஸ்ரீ அங்கு தொங்கிக் கொண்டிருந்த மின்சார வயரை பிடித்ததில் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து அங்கிருந்தவா்கள் குழந்தையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT