முகப்பு
கடலூர்

பல்கலை. மாணவா் தற்கொலை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 6 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:01 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., நா்சிங் படித்து வந்தவா் கோவை அருகே உள்ள வால்பாறை பன்னீா்நேசு பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ரவீன் (22). இவா், மருத்துவக் கல்லூரி அருகே உள்ள அடுக்ககத்தில் தங்கிப் படித்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்ட நிலையில் ரவீன் இறந்து கிடந்தாா்.

Advertisement

தகவலறிந்து வந்த அண்ணாமலை நகா் போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மாணவா் ரவீன் எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.