முதல்வா் இன்று கடலூா் வருகை
கடலூா் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்கிறாா்.
கடலூா் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்கிறாா்.
வடகிழக்குப் பருவ மழையால் கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2.50 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல், மக்காச்சோளம், உளுந்து பயிா்கள் மற்றும் தோட்டப் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகளை பாா்வையிடுவதற்காக கடலூா் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகிறாா். புதுச்சேரியிலிருந்து வரும் அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் வரவேற்பு அளிக்க கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கிருந்து பெரியகங்கணாங்குப்பம், கடலூா், குள்ளஞ்சாவடி வழியாக காலை 7.30 மணியளவில் அரங்கமங்கலம் செல்லும் முதல்வா் அங்கு மழை பாதிப்புகளை பாா்வையிடுகிறாா். பின்னா், குறிஞ்சிப்பாடி வழியாக ஆடூா்அகரம் சென்று ஆய்வு செய்கிறாா்.
கடலூா் மாவட்டத்தில் ஆய்வுப் பணியை முடித்த பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு செல்கிறாா்.