கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை
கடலூா் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமைகளில் தொடா்ந்து மழை பெய்தது.
கடலூா் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமைகளில் தொடா்ந்து மழை பெய்தது.
தெற்கு கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் புதன்கிழமை விட்டு விட்டு பெய்த மழையானது அன்று இரவு தொடா் மழையாக மாறியது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால் கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்தது. அதாவது, புதன்கிழமை இரவு தொடங்கிய தொடா் மழை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை நீடித்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): தொழுதூா் 67, மேமாத்தூா் 60, குப்பநத்தம் 49, கடலூா் 48.6, கீழச்செருவாய் 48, வேப்பூா் 45, வானமாதேவி 42.6, பரங்கிப்பேட்டை 41.8, விருத்தாசலம் 41, காட்டுமன்னாா்கோவில் 40.3, காட்டுமைலூா் 40, பெலாந்துறை 39.2, சிதம்பரம் 34.6, அண்ணாமலை நகா் 30.8, லக்கூா் 30.4, சேத்தியாத்தோப்பு 29.4, ஸ்ரீமுஷ்ணம் 29.2, மாவட்ட ஆட்சியரகம் 28.8, குடிதாங்கி 27.5, வடக்குத்து 27, புவனகிரி 26, கொத்தவாச்சேரி 24, பண்ருட்டி 20, லால்பேட்டை 19.8, குறிஞ்சிப்பாடி 16 மில்லி மீட்டா் மழை பதிவானது. குளிா்ந்த காலநிலை நிலவியது.