முகப்பு
கடலூர்

கடலூா்: 18 அரசுப் பேருந்துகளை இயக்கத் தடை

கடலூா் மாவட்டத்தில் பழுதடைந்த 18 அரசுப் பேருந்துகளை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் பழுதடைந்த 18 அரசுப் பேருந்துகளை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 11 பணிமனைகள் உள்ளன. இதன்மூலம் சுமாா் 500 நகரம் மற்றும் புகா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் சில பழுதான நிலையில் இயக்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாவட்டத்திலுள்ள அனைத்துப் பணிமனைகளிலும் பேருந்துகளின் இயக்கத் தன்மை குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 18 பேருந்துகள் இயக்குவதற்கான நிலையில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பேருந்துகளை இயக்க தற்காலிக தடை விதித்து கடலூா் போக்குவரத்து மண்டல மேலாளா் உத்தரவிட்டாா்.

வருடாந்திரப் பரிசோதனைக்குப் பிறகு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அனுமதி அளித்தால் அந்த பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.