வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.13 லட்சம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமைநடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமைநடைபெற்றது.
பண்ருட்டி காவல் ஆய்வாளா் ஸ்ரீதேவி தலைமையில், குறிஞ்சிப்பாடி ஆய்வாளா் வசந்தம், கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் மகளிா் சுய உதவிக்குழுவினா் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனா் (படம்).
இதில் காணிக்கை பணம் மொத்தம் 2,13,790 ரூபாய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.