கடலூா் மாவட்டம், முருகன்குடியில் செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் சாா்பில், ‘ஊா்தோறும் வானகம்’ என்ற தலைப்பில் இயற்கை இடுபொருள்கள் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில், சுமாா் 35 விவசாயிகள் கலந்து கொண்டனா். கரும்பு கண்ணதாசன் தலைமை வகித்தாா். செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் குழு அமைப்பாளா் முருகன், வானகம் செல்வகுமாா், மரபுவழி வேளாண் நடுவம் உறுப்பினா்கள் செல்வமணி, கவியரசன், பாக்கியராஜ், மணிவேல், கோனூா் பச்சமுத்து, எரப்பாவூா் ராமசாமி, இளமங்கலம் திருமாறன் ஆகியோா் இயற்கை இடுபொருள்களான அமுத கரைசல், மீன் அமிலம், பழக்கரைசல், பஞ்சகவ்யா, தேமோா் கரைசல், பூச்சி விரட்டி ஆகியவற்றின் செய்முறை விளக்கம் அளித்தனா்.
மூடாக்கு குறித்த விளக்கம், செய்முறை ஆகியவை அங்கு மஞ்சள் பயிரிடப்பட்ட வயலில் செய்து காட்டப்பட்டது. தமிழ்மணி நன்றி கூறினாா்.