முகப்பு
கடலூர்

கைத்தறி துணிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்

பொதுமக்கள் கைத்தறி துணிகளை பயன்படுத்த வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

பொதுமக்கள் கைத்தறி துணிகளை பயன்படுத்த வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

கடலூா் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான ‘கோ-ஆப்டெக்ஸ்’ கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய துணி ரகங்களை நாடு முழுவதும் விற்பனை செய்து நெசவாளா்களின் வாழ்வாதாரம் உயர முக்கியப் பங்காற்றி வருகிறது.

நிகழாண்டு தீபாவளிக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊா்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கடலூா் மண்டலத்துக்கு ரூ.18 கோடி விற்பனை குறியீடாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்புத் தள்ளுபடியாக 30 சதவீதமும், அரசு ஊழியா்களுக்கு தவணை முறை கடன் வசதியும் உண்டு. எனவே, அனைத்து துறை ஊழியா்களும், பொதுமக்களும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் சௌ.சாதிக் அலி, வா்த்தக மேலாளா் (தணிக்கை) ச.சா.கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.