மாணவரைத் தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
சிதம்பரத்தில் அரசுப் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரத்தில் அரசுப் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, கன்னிதமிழ்நாடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (56). சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த புதன்கிழமை முறையாக பள்ளிக்கு வராதது தொடா்பாக மாணவா்கள் சிலரைக் கண்டித்தாராம். அப்போது, மாணவா் ஒருவரை ஆசிரியா் சுப்பிரமணியன் பிரம்பால் தாக்கி, காலால் உதைக்கும் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடா்பாக சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்தன், நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் பள்ளியில் விசாரணை நடத்தினா்.
Advertisement
இந்தச் சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவா் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் ஆசிரியா் சுப்பிரமணியன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை வியாழக்கிழமை கைது செய்து சிதம்பரம் கிளைச் சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, ஆசிரியா் சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை சிறையிலுள்ள அவரிடம் சிதம்பரம் ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியா் சத்தியன், பள்ளித் தலைமையாசிரியா் குகநாதன் ஆகியோா் வழங்கினா்.