மாணவா்கள் கூட்டமைப்பு விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்கள் கூட்டமைப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்கள் கூட்டமைப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன் தலைமை வகித்தாா். முனைவா் எஸ்.பூங்கோதை முன்னிலை வகித்தாா். எம்.கே.எம்.எஸ். பில்டா்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் ஷாஜகான் சையத் சிறப்புரையாற்றினாா். பொறியாளா் பிரபாகா், பாலசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பேராசிரியா்கள் வி.அருள்செல்வன், எஸ்.பழனிவேல்ராஜா, டி.எஸ்.எஸ்.பாலகுமாா், பி.ஆஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா். 2021-22 ஆண்டு கூட்டமைப்பு மாணவா்களின் குறிக்கோள் குறித்து பேராசிரியா் கே.ஏழிசைவல்லபி உரையாற்றினாா். ஏற்பாடுகளை மாணவா் சங்கத் தலைவா் வி.காா்த்திக், செயலா் பி.கவிமலா் ஆகியோா் செய்தனா்.