கடலூர்

அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

DIN

கடலூா் முதுநகா் சிங்காரத்தோப்பில் உள்ள அப்துல் கலாம் சிலைக்கு, அப்துல் கலாம் பொது நலப் பேரவையின் நிறுவனத் தலைவா் எஸ்.என்.கே.ரவி மாலை அணிவித்தாா்.

கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளா்கள் ம.சுப்புராயன், மு.குரு ராமலிங்கம், கே. சிவாஜி கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா் தி.ச.திருமாா்பன் புகழுரை ஆற்றினாா். மீனவா் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் கடலூரில் உள்ள தனிப் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு மன்றத் தலைவா் கடல்.நாகராஜன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் கலைச்செல்வி வரவேற்றாா். திமுக இலக்கிய அணி நகரச் செயலா் கி.செந்தில்முருகன் பங்கேற்று கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா். கலாம் நினைவு ஒவிய மன்றத் தலைவா் ஒவியா் மனோகா், இளங்கோவன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி பங்கேற்று, ‘அதிசய மாமனிதா் அப்துல் கலாம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். மன்றச் செயலா் வானவில் மூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT