முகப்பு
கடலூர்

சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவ கொடியேற்றம்

 சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

Updated On : 24 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:56 AM

 சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவகங்கை மேற்குக் கரையில் திருக்காமகோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் வரும் 30-ஆம் தேதி திருத்தோ் உற்சவமும், 31-ஆம் தேதி பட்டு வாங்குதல் மற்றும் பூரச் சலங்கை உற்சவமும், நவ.1-ஆம் தேதி காலை தபசு உற்சவமும், அன்று இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீசோமாஸ்கந்தா் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.