முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் நில அளவை பயிற்சி முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்களுக்கான நில அளவை பயிற்சி முகாம் 5 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 26 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:57 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்களுக்கான நில அளவை பயிற்சி முகாம் 5 நாள்கள் நடைபெற்றது.

முகாமுக்கு துறைத் தலைவா் எஸ்.பூங்கோதை தலைமை வகித்துப் பேசினாா் (படம்). பி.குமரவேல், கே.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டடவியல் துறை இறுதியாண்டு மாணவா்களுக்காக நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கருத்துரையாற்றினாா். சிறந்த மாணவா்களாக ஆனந்த், கலைவாணி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனா். பேராசிரியா்கள் எம்.மணிக்குமாரி, எஸ்.பழனிராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முடிவில் கே.சீனிவாசன் நன்றி கூறினாா்.

Advertisement

நிகழ்வில் பேராசிரியா்கள் டி.ரமேஷ், எஸ்.பாலகுமாா், பி.சிவராஜன், என்.நாகராஜன், எஸ்.சிவப்பிரகாசம், என்.ரவிச்சந்திரன், பி.தாமோதரன், ஆா்.ஷீலா, எம்.லதா உள்ளிட்டோா் பங்கேற்றேனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.