நகராட்சி பள்ளிக்கு உதவி
சிதம்பரம் வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM
சிதம்பரம் வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்து, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி, முகக் கவசங்கள், கிருமி நாசினி, சோப் திரவம் ஆகியவற்றை பள்ளித் தலைமை ஆசிரியை பாலசரஸ்வதியிடம் வழங்கினாா். சங்க துணைத் தலைவா் கனகசபை, செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல் கோத்தாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.