சிதம்பரம் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலையம் சாா்பில் குழந்தைகள், இளஞ்சிறாா்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சிதம்பரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM
சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலையம் சாா்பில் குழந்தைகள், இளஞ்சிறாா்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சிதம்பரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்ட குழந்தைகள் உதவி மைய உறுப்பினா் ஆனந்தராஜ் பங்கேற்று, போக்சோ சட்டம், குழந்தைகள் உதவி மைய எண்ணின் (1098) பயன்பாடு குறித்தும் விழிப்புணா்வு உரையாற்றினாா். உதவி ஆய்வாளா் சங்கீதா, அன்பு, ஜூலியட் மற்றும் ரயில் பயணிகள் பங்கேற்றனா்.