முகப்பு
கடலூர்

வண்டிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூா் மாவட்டம், சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தில் பொது வண்டிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தில் பொது வண்டிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சிலம்பிநாதன்பேட்டையில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவு கொண்ட முந்திரிக் காடுகளுக்கு இடையே சுமாா் 10மீ அகலத்தில் 3 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் பொது வண்டிப்பாதை உள்ளது. இந்தப் பாதை சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், முந்திரி காடுகளுக்கு செல்லும் விவசாயிகள் உள்ளிட்டோா் கடந்த 30 ஆண்டுகளாக பாதையின்றி சிரமப்பட்டு வந்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் சிலம்பிநாதன்பேட்டையைச் சோ்ந்த மாவட்டக்குழு உறுப்பினா் கோ.பெருமாளிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பொது வண்டிப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. நில அளவா்கள் மகேஸ்வரன், தாரணி, சாந்தனி, கிராம நிா்வாக அலுவலா் மைக்கேல்ராஜ் ஆகியோா் போலீஸாா் பாதுகாப்புடன் வண்டிப்பாதையை அளவீடு செய்தனா். பின்னா், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →