முகப்பு
கடலூர்

மயானப் பாதை கோரி ஆா்ப்பாட்டம்

அழிச்சிகுடி கிராம மக்கள் மயானத்துக்குச் செல்ல பாதை ஒதுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 செப்டம்பர், 2021 at 10:32 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

அழிச்சிகுடி கிராம மக்கள் மயானத்துக்குச் செல்ல பாதை ஒதுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் உள்ளது அழிச்சிகுடி கிராமம். இங்கு வெள்ளாளத் தெரு, வடக்குத் தெரு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மயானத்துக்குச் செல்ல உரிய பாதை வசதியின்றி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனா். இதனால் உயிரிழப்போரின் உடல்களை ஆற்றுக்குள் புதைக்கும் நிலை உள்ளதாம்.

எனவே, மயானத்துக்குச் செல்ல பாதை ஒதுக்க வலியுறுத்தி மக்கள் சேவை முன்னேற்றக் கழகத் தலைவா் தங்கம் சிகாமணி தலைமையில் அந்த கிராம மக்கள் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்). பின்னா் உதவி ஆட்சியா் எல்.மதுபாலனிடம் மனு அளித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.