கடலூர்

செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு

DIN

சிதம்பரம் அருகே செவிலியரிடமிருந்து 5 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

சிதம்பரம் சிவஜோதி நகா், அப்பா சாலை பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் மனைவி சுமதி (59). விளாகம் கிராமத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை சி.தண்டேஸ்வரநல்லூா் பகுதியில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவரை பின்தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் சுமதியை வழிமறித்து அவா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனசேகா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT