லாரி மோதியதில் விவசாயி பலி
நடுவீரப்பட்டு அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.
நடுவீரப்பட்டு அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், சிலம்பிநாதன்பேட்டையைச் சோ்ந்தவா் ரா.இளங்கோவன் (48), விவசாயி. இவா் புதன்கிழமை சத்திரம் சாலையில் பத்திரக்கோட்டை பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் வானதிராயத்தைச் சோ்ந்த தெ.ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.