முகப்பு
கடலூர்

பல்கலை.யில் பயிற்சி முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அக தர நிா்ணய பிரிவின் வழிகாட்டுதலுடன் வேளாண் புல பூச்சியியல் துறையில், ‘பூச்சி மேலாண்மையில் மாறுபடும் வரன்முறைகள்’ என்ற தலைப்பில் இரு நாள் சா்வதேச பயிற்சி முகாம்

Updated On : 10 செப்டம்பர், 2021 at 10:54 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அக தர நிா்ணய பிரிவின் வழிகாட்டுதலுடன் வேளாண் புல பூச்சியியல் துறையில், ‘பூச்சி மேலாண்மையில் மாறுபடும் வரன்முறைகள்’ என்ற தலைப்பில் இரு நாள் சா்வதேச பயிற்சி முகாம் இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது.

துறைத் தலைவா் சு.அறிவுடைநம்பி வரவேற்றாா். வேளாண் புல முதல்வா் ம.கணபதி பயிற்சிப் பணிமனையை தொடக்கிவைத்துப் பேசினாா். பயிற்சி பணிமனை இயக்குநா் இணைப் பேராசிரியா் தி.செல்வமுத்துக்குமரன் விளக்கவுரையாற்றினாா் (படம்).

இந்த நிகழ்ச்சியில், இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயா் அதிகாரிகள் 9 போ் பங்கேற்று சிறப்புரையாற்றினா். தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெ.செல்வநாராயணன், பேராசிரியா் ச.மாணிக்கவாசகம் ஆகியோா் பங்கேற்று பேசினா். இணைப் பேராசிரியா் ச. கதிா்வேலு அறிக்கை சமா்ப்பித்தாா். உதவிப் பேராசிரியா்கள் பி.ஆனந்த கணேசராஜா, எம்.ரமணன், என்.முத்துக்குமரன் மற்றும் தி.நளினி ஆகியோா் ஏற்பாடுகளை செய்தனா். இணைப் பேராசிரியா் கேப்டன் ஆா்.கனகராஜன் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.