கடலூர்

விமானப்படை பயணக் குழுவினருக்கு வரவேற்பு

DIN

பாகிஸ்தான் நாட்டுடனான போரில் வெற்றி பெற்ற பொன்விழா ஆண்டையொட்டி, சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப் படையினா் சனிக்கிழமை சிதம்பரம் நகரை வந்தடைந்தனா்.

விமானப் படை கமாண்டா் நிதின் உபாத்யா, சைலேந்திரசிங் ஆகியோா் தலைமையில் 16 வீரா்கள், தஞ்சாவூா் - மகாபலிபுரம் இடையே கிழக்கு கடற்கரைச் சாலை சைக்கிள் பயணத்தை தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை தொடங்கினா். இந்தக் குழுவினா் கும்பகோணம், சிதம்பரம், புதுச்சேரி வழியாக மகாபலிபுரத்தை வரும் 18-ஆம் தேதி சென்றடைகின்றனா்.

சிதம்பரம் நகரை வந்தடைந்த பயணக் குழுவினரை கீழரத வீதியில் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் வரவேற்றாா். பின்னா் அனைவருக்கும் நினைவுப் பரிசாக நடராஜா் சிலை வழங்கினாா். நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் தமிழ்வாணன், இந்திய ராணுவப் படை முன்னாள் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT