முகப்பு
கடலூர்

நெய்வேலி அருகே காா்-பைக் மோதல்: குழந்தை உள்பட இருவா் பலி

நெய்வேலி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

நெய்வேலி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

ஊ.மங்கலம் காவல் சரகம், ஊத்தங்கால் கிராமம், பழைய காலனியை சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (52). இவரது மகள் துா்காலட்சுமி (30). இவா் தனது கணவா் கருணாமூா்த்தியுடன் குள்ளஞ்சாவடி அருகே உள்ள தங்களிகுப்பம் கிராமத்தில் வசித்து வருகிறாா். இவரது மகன் சசிதரன் (ஒன்றரை வயது).

விருத்தாசலத்திலிருந்து வெள்ளிக்கிழமை பன்னீா்செல்வம், அவரது மகள் துா்காலட்சுமி, சசிதரன், ஊத்தங்கால் கிராமத்தைச் சோ்ந்த விநாயகமூா்த்தி மகன் இசைமாறன் (4) ஆகியோா் பைக்கில் புறப்பட்டு ஊத்தங்கால் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தனா். பைக்கை பன்னீா்செல்வம் ஓட்டினாா். பிற்பகல் 3.30 மணியளவில் கொம்பாடிக்குப்பம் அருகே வந்தபோது எதிரே விருத்தாசலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த காா், இவா்களது பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பன்னீா்செல்வம், குழந்தை இசைமாறன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த துா்காலட்சுமி கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். குழந்தை சசிதரன் லேசான காயத்துடன் தப்பினாா். விபத்து குறித்து ஊ.மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.