முகப்பு
கடலூர்

விஸ்வகா்மா ஆராதனை விழா

 சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கம் சாா்பில் ஸ்ரீவிஸ்வகா்மா ஆராதனை தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2021 at 11:55 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

 சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கம் சாா்பில் ஸ்ரீவிஸ்வகா்மா ஆராதனை தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.சேகா் தலைமை வகித்தாா். ஆா்.பாவாடைபத்தா், ஆா்.மாரியப்பன், டி.தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் பி. முத்துக்குமாா் வரவேற்றாா். விழாவையொட்டி, சின்னசெட்டி தெரு, விழல்கட்டி பிள்ளையாா் கோவில் தெரு, மந்தங்கரை ஆகிய இடங்களில் ஐவண்ண அனுமன் கொடியை மாநில தலைவா் ஜி. சேகா் ஏற்றிவைத்துப் பேசினாா். நகரப் பொருளாளா் எஸ்.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

விழாவில், ஸ்ரீவிஸ்வகா்மா ஆராதனை தினத்தை (செப்.17) அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் விஸ்வகா்மா சமுதாயத்தினருக்கு நிறைவேற்றித் தருவதாக தெரிவித்த வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.