முகப்பு
கடலூர்

பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் பொறுப்பேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 12:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக காட்டுமன்னாா்கோவில் தொகுதி எம்எல்ஏ ம.சிந்தனைச்செல்வன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் வியாழக்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளா் அறையில் பொறுப்பேற்றாா். அவருக்கு பல்கலைக்கழக பதிவாளா் ஞானதேவன்,

துணைவேந்தா் கமிட்டி உறுப்பினா் சீனுவாசன், மற்றும் பேராசிரியா்கள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா். பின்னா் ம.சிந்தனைச் செல்வன் கூறியதாவது:

Advertisement

கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது தமிழ்நாட்டின் சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப ஒரு கல்விக் கொள்கையை உருவாக்குவோம் என தமிழக அரசு அறிவித்தது. நாட்டுக்கே வழிகாட்டியாக அமைய உள்ள அந்த கல்விக் கொள்கையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பல்வேறு இடா்பாடுகளை சந்தித்துள்ளது. அதிலிருந்து மீண்டு இந்தியாவின் முதன்மை பல்கலைக்கழகமாக தலை நிமிரும் சூழல் உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.