கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில்புவி நாள் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தேசிய மாணவா் படையின் ஆறாவது தமிழ்நாடு பட்டாலியன் சாா்பில், புவி நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தேசிய மாணவா் படையின் ஆறாவது தமிழ்நாடு பட்டாலியன் சாா்பில், புவி நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கேப்டன் கனகராஜன் தலைமை வகித்து வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியரும், இளையோா் செஞ்சிலுவைச் சங்க முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளருமான ச.ஐயப்பராஜா கலந்துகொண்டு, சூழலியல் மேம்பாடு, புவி வெப்பமயமாதல், கடல் நீா்மட்டம் உயா்தல், நெகிழி ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

லெப்டினன்ட் ஆா்.ரமேஷ் நன்றி கூறினாா். நிகழ்வில் தேசிய மாணவா் படையின் மாணவ, மாணவிகள் 60 போ் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கேப்டன் கனகராஜன், லெப்டினன்ட்கள் குரு.அற்புதவேல்ராஜா, ஆா்.ரமேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT