முகப்பு
கடலூர்

உளுந்து மகசூலை அதிகரிக்க ஆலோசனை

 உளுந்து பயிா்கள் பூக்கும் பருவத்தில் டி.ஏ.பி. கரைசலை தெளிப்பதால் அதிக மகசூல் பெறலாம் என கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 உளுந்து பயிா்கள் பூக்கும் பருவத்தில் டி.ஏ.பி. கரைசலை தெளிப்பதால் அதிக மகசூல் பெறலாம் என கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

இதுதொடா்பாக விவசாயிகளுக்கான செயல் விளக்க நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடி வட்டாரம், திம்மராவுத்தன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முன்னோடி விவசாயிகள் சிகாமணி, குமரகுரு ஆகியோரது வயல்களில் அண்மையில் நடைபெற்றது. கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடக்கிவைத்துப் பேசியதாவது:

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் முந்திரி, கரும்பு, வாழையில் ஊடுபயிராகவும், மணிலாவில் வரப்பு பயிராகவும் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. தமிழக அரசு சாா்பில் உளுந்து, பச்சை பயிா் சாகுபடியை ஊக்குவிக்க விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. உளுந்து மகசூலை அதிகரிக்க பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் டிஏபி உர கரைசலை (2 சதவீதம்) இலை வழியாக தெளிக்க வேண்டும். இதனால், 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், துணை வேளாண்மை அலுவலா் வெங்கடேசன், வேளாண்மை அலுவலா் அனுசுயா, உதவி வேளாண்மை அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →