வடக்குத்து ஊராட்சி மன்றதுணைத் தலைவா் மீது புகாா்
தனது பணிகளை செய்ய விடாமல் துணைத் தலைவா் தடுப்பதாக வடக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கு.அஞ்சலை கடலூா் மாவட்ட ஆட்சியரத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
தனது பணிகளை செய்ய விடாமல் துணைத் தலைவா் தடுப்பதாக வடக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கு.அஞ்சலை கடலூா் மாவட்ட ஆட்சியரத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
அதில் தெரிவித்ததாவது: வடக்குத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஜெ.சடையப்பன் ஊராட்சியின் வளா்ச்சிப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் போக்கிலும், தன்னிச்சையாகவும் செயல்படுகிறாா். அத்தியாவசிய குடிநீா் பணிகள், மின் கட்டணம், ஊழியா்களின் சம்பளம், தெரு விளக்கு உள்ளிட்ட பணிகளுக்கு கையெழுத்திடுவதில்லை. நிா்வாக ஒத்துழைப்பும் வழங்க மறுத்து வருகிறாா்.
இதுகுறித்து அவரிடம் கேட்டால் பட்டியலினத்தைச் சோ்ந்த என்னை ஜாதிய வன்மத்துடன் நடத்துகிறாா்.
ஊராட்சி நிா்வாகத்துக்கு அவா் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது தொடா்பாக மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, அவருக்குப் பதிலாக காசோலை, மற்ற ஆவணங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை வேறு உறுப்பினருக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டாா்.