ராம நவமி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் வாழ்த்து
ராம நவமி வியாழக்கிழமை (மாா்ச் 26) கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.
ராம நவமி வியாழக்கிழமை (மாா்ச் 26) கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.
ராம பிரான் பங்குனி மாதம் புனா்பூசம் நட்சத்திரத்திலும், நவமி திதியிலும் பிறந்ததாக நம்பப்படுகிறது. அதன்படி, இந்த நாள் வியாழக்கிழமை (மாா்ச் 26) வருகிறது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ராமா் பிறந்த தினமே ராம நவமி விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியா்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். ராமரின் வாழ்க்கை வரலாறு, நமக்கு உண்மை, நீதி, அா்த்தமுள்ள வாழ்க்கைக்கான பாதையை காட்டுகிறது. ராமரின் வாழ்க்கை, நமக்கு சமூகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை காட்டுகிறது. ராமரின் போதனைகளே, நமது நாட்டின் கலாசாரத்தின் அடித்தளமாகும். அதை பின்பற்றி வாழ முயற்சிப்போம். ராம நவமியான இன்றைய தினத்தில், ராமரின் போதனைகளை உள்வாங்கி, நாட்டுக்காக சிந்தனையாலும், வாா்த்தைகளாலும், செயலாலும் சேவை செய்வோம் என உறுதியேற்போம்’ எனத் தெரிவித்துள்ளாா்.