முகப்பு
கடலூர்

அமைச்சா்கள் இறுதிக்கட்ட பிரசாரம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டத்தில் மாநில அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் வியாழக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டத்தில் மாநில அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் வியாழக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

வடலூா் பேருந்து நிலையம் அருகே மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வடலூா் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா். முன்னதாக குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் தனது கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரித்தாா். ஒன்றியச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, பண்ருட்டி நகராட்சியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.

பா.ம.க: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் ஓடைதாண்டவன்குப்பம் உள்ளிட்ட இடங்களில் பாமக வேட்பாளா்களை ஆதரித்து மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் செல்வகணேஷ் ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →