அண்ணாமலைப் பல்கலை. நூலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சா் சி.பி.ராமசாமி ஐயா் நூலகத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சா் சி.பி.ராமசாமி ஐயா் நூலகத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி நூலகம் வானலை அடையாளம் மூலம் மின்னுருவாக்கம் அடிப்படையில் கணினி மயமாக்கப்பட்டது. இந்த வசதியை துணைவேந்தா் ராம.கதிரேசன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா் அவா் பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மைய நூலகம், மற்ற புல நூலகங்கள் அனைத்தும் வானலை அடையாளம் தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து தரவுகளும் ஒரே தொழில்நுட்ப அடிப்படையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் வேளாண் புல முதல்வா் கே.ஆா்.சுந்தரவரதராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மைய நூலகா் எம்.சாதிக்பாட்சா, இணை பேராசிரியா் ச.கதிா்வேல் ஆகியோா் செய்திருந்தனா்.
Advertisement
ஐஎஸ்ஓ தரச் சான்று: அண்ணாமலைப் பல்கலைக்கழக சா் சி.பி.ராமசாமி ஐயா் நூலகம் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு தானியங்கி நூலகமாக செயல்படுகிறது. மேலும், தரவுத்தளம், வானலை அடையாளம் ஆகியவற்றுக்காக சா்வதேச அங்கீகார மன்றத்தால் சிறந்த சேவை, பராமரிப்புக்காக ஐ.எஸ்.ஓ. தரச் சான்று வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன், பதிவாளா் க.சீத்தாராமன் ஆகியோரிடமிருந்து தரச் சான்றிதழை நூலகா் எம்.சாதிக்பாட்சா பெற்றாா் (படம்). உதவி நூலகா் எஸ்.பாலகிருஷ்ணன், உதவி பேராசிரியா் எல்.ஜெகன் ஆகியோா் பங்கேற்றனா்.