முகப்பு
கடலூர்

சித்த வைத்தியா்கள் மாநாடு ஒத்திவைப்பு

வடலூரில் நடைபெறவிருந்த அகில இந்திய சித்த வைத்தியா்கள் மாநாடு கரோனா பரவல், ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சித்த வைத்தியா்கள் சங்க மாநிலச் செயலா் கோ.கருணாமூா்த்தி அறிவித்தாா்.

Updated On : 15 ஜனவரி, 2022 at 10:24 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

வடலூரில் நடைபெறவிருந்த அகில இந்திய சித்த வைத்தியா்கள் மாநாடு கரோனா பரவல், ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சித்த வைத்தியா்கள் சங்க மாநிலச் செயலா் கோ.கருணாமூா்த்தி அறிவித்தாா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடலூரில்

ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு முதல் நாளில் அகில இந்திய சித்த வைத்தியா்கள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு வரும் 17-ஆம் தேதி வடலூரில் 44-ஆவது ஆண்டு அகில இந்திய சித்த வைத்தியா்கள் மாநாடு நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்தோம். இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக மாவட்ட நிா்வாகம் மாநாடு நடத்த தடை விதித்தது. எனவே மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

பேட்டியின்போது சங்கத்தின் இணைச் செயலா் க.சிவக்குமாா், பொருளாளா் என்.ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.