செஸ் ஒலிம்பியாட்: என்எல்சி ரூ.7.50 கோடி பங்களிப்பு நிதி
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ.7.50 கோடி பங்களிப்பு நிதியை வழங்கியது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ.7.50 கோடி பங்களிப்பு நிதியை வழங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைக் குழு சாா்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தும் பணியில் பங்கேற்குமாறு என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில், என்எல்சி நிறுவனத் தலைவா் ராகேஷ்குமாா், அந்த நிறுவன இயக்குநா் குழு உறுப்பினா்கள் ஒப்புதல் அளித்து பங்களிப்பு நிதியாக
ரூ.7.50 கோடி வழங்கியுள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் தலைமை மண்டல மேலாளா் பிரபு கிஷோா் தலைமையிலான குழுவினாா் மேற்கொண்டனா்.