பிரதமர் வருகை: திருப்பரங்குன்றம் கோயிலில் பலத்த பாதுகாப்பு!
திருப்பரங்குன்றம் கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பற்றி...
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு நாளை பிரதமர் மோடி வருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் கோயிலைச் சுற்றி செல்போன் சிக்னலைத் தடுக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் கோயிலில் சிறப்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி குஜராத் மற்றும் ராஜஸ்தான் பயணங்களைத் தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையடுத்து, நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை புதுச்சேரி செல்லும் அவர், அங்கு ரூ. 2,700 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மார்ச் 1 மாலை 3 மணியளவில் மதுரைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரூ. 4,400 கோடி மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழாவின்போது மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த சர்ச்சை ஏற்பட்டது. இதன்பின்னர் பிரதமர் மோடி தற்போது திருப்பரங்குன்றம் வரவிருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனைக்குப் பிறகே மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.