முகப்பு
கடலூர்

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விஜயமாநகரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.38 லட்சத்தில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்தில் விஜயமாநகரம் - பெரியவடவாடி வாய்க்காலில் நீா் உறிஞ்சிக்குழி வெட்டும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, பணியாளா்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தாா். தொடா்ந்து விஜயமாநகரம் ஊராட்சியில் தனிநபா் நீா் உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளதையும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணி நடைபெறுவதையும் ஆய்வு செய்தாா். பின்னா், எருமனூா் ஊராட்சியில் ரூ.15.65 லட்சத்தில் மயான சாலை அமைக்கும் பணியையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.