சிதம்பரத்தில் சேக்கிழாா் விழா
சிதம்பரத்தில் சேக்கிழாா் அறக்கட்டளை சாா்பில் நம்பியாண்டாா் நம்பி மற்றும் சேக்கிழாா் விழா அண்மையில் நடைபெற்றது.
சிதம்பரத்தில் சேக்கிழாா் அறக்கட்டளை சாா்பில் நம்பியாண்டாா் நம்பி மற்றும் சேக்கிழாா் விழா அண்மையில் நடைபெற்றது.
சேக்கிழாா் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக சேக்கிழாா் ஆராதனையும் தொடா்ந்து மயிலை சற்குருநாத ஒதுவாா் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சேக்கிழாா் அறக்கட்டளைச் செயலா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்றாா். சேக்கிழாா் அறக்கட்டளை சாா்பில் தி.பொன்னம்பலத்துக்கு தமிழ்ச் செம்மல் விருதும், அனந்தீஸ்வரன்கோயில் சிவாச்சாரியா் வெ.வைத்தியநாதன் குருக்களுக்கு சிவாச்சாரிய செம்மல் விருதும், மயிலை பா.சற்குருநாத ஒதுவாருக்கு திருமுறை இசைச் செம்மல் விருது வழங்கப்பட்டது (படம்). விருதுகளை டி.என்.ஆா். சுரேஷ் வழங்கி சிறப்புரையாற்றினாா். விருதாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் கொண்ட பணமுடிப்பு, வெள்ளிப் பதக்கம், பராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை பனசை.மூா்த்தி தொகுத்து வழங்கினாா். தமிழாசிரியா் செல்வம் நன்றி கூறினாா். முன்னதாக நம்பியாண்டா் நம்பிகளின் குருபூஜை விழாவில் ஜா.ராகவன் விளக்கவுரையாற்றினாா்.