முகப்பு
கடலூர்

ஏழுகரக மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் அருகே பெரியகங்கணாங்குப்பத்தில் அமைந்துள்ள ஏழுகரக மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

கடலூா் அருகே பெரியகங்கணாங்குப்பத்தில் அமைந்துள்ள ஏழுகரக மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயில் புனரமைக்கப்பட்ட நிலையில், கடந்த 3-ஆம் தேதி விக்னேஸ்வா் பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடா்ந்து, பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு வாஸ்து சாந்தி, மிருத் சங்கரஹனம் பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை யாக சாலை அலங்காரம், கொடியேற்றம், முதல் கால யாக வேள்வி ஆகியவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, பிம்ப ரஷாந்தனம், நாடி சந்தனம் செய்யப்பட்டது. இதையடுத்து, யாத்ரா தானத்துடன் ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீா் அடங்கிய கலசத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் கோயில் விமானத்துக்கு புனித நீா் ஊற்றி (படம்) கும்பாபிஷேகம் செய்து வைத்தாா். பின்னா், கோயிலின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மன் விக்ரகத்தின் கண்கள் திறக்கப்பட்டன. தொடா்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டடது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலையில் அம்மன், விநாயகா், முருகன் வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் நாட்டாமைகள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.