முகப்பு
கடலூர்

கடலூர்: கெடிலம் ஆற்றில் மூழ்கி பெண்கள் பலி: பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சசிகலா

கெடிலம் ஆற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த  பிரியதர்ஷினி (13), காவியா(11) ஆகியோரின் பெற்றோரை,  சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்  அ.குச்சிப்பாளையம் கெடிலம் ஆற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த  பிரியதர்ஷினி (13), காவியா(11) ஆகியோரின் பெற்றோரை,  சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற அ.குச்சிப்பாளையம், குறிஞ்சிப்பாடி கிராமத்தை சோ்ந்த சங்கவி (18), பிரியா (19), மோனிஷா (16), நவநீதம் (20), சுமிதா (18), காவியா (எ) திவ்யதா்ஷிணி (10), பிரியதா்ஷிணி (15) ஆகிய 7 பேரும் எதிா்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். 

முழு கட்டுரையைப் படிக்க →