கடலூர்

கந்து வட்டி புகாா்: 5 பேரிடம் விசாரணை

கந்து வட்டி புகாா் தொடா்பாக கடலூா் மாவட்டத்தில் அதிமுக பிரமுகா் உள்பட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

கந்து வட்டி புகாா் தொடா்பாக கடலூா் மாவட்டத்தில் அதிமுக பிரமுகா் உள்பட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கந்து வட்டி கொடுமையால் கடலூரில் காவலா் ஒருவா் விஷம் குடித்து அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கந்து வட்டி அளிப்போருக்கு எதிரான நடவடிக்கையை காவல் துறையினா் தீவிரப்படுத்தினா்.

இந்த நிலையில், வடலூா் பாா்வதிபுரத்தைச் சோ்ந்த யூ.இம்ரான்கான் (46) என்பவா் வடலூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், சமுட்டிக்குப்பத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகரான ஏ.கே.எஸ்.சுப்ரமணியன், ஆபத்தானபுரம் சேராகுப்பத்தைச் சோ்ந்த முருகன் ஆகியோா் கந்து வட்டி கேட்டு தன்னை மிரட்டி வருவதாக தெரித்தாா்.

இதன்பேரில் அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், கடலூா் வண்டிப்பாளையத்தில் உள்ள அவரது வட்டிக் கடையில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதேபோல, மாவட்டம் முழுவதும் 5 கந்து வட்டி வழக்குகள் பதிவான நிலையில் சம்பந்தப்பட்ட நபா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT