கடலூா் மாவட்ட கூடைப்பந்து அணி வீரா்கள் தோ்வு
கடலூா் மாவட்ட கூடைப்பந்து அணி வீரா்கள், வீராங்கனைகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்ட கூடைப்பந்து அணி வீரா்கள், வீராங்கனைகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில், மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கழகத்தின் மாவட்டச் செயலா் ரெ.விஜயசுந்தரம் தலைமை வகித்தாா். தலைவா் அருளானந்தம், தேசிய விளையாட்டு வீரா் தங்கதுரை, துணைத் தலைவா் அருள் செல்வராஜ், இணைச் செயலா் சிட்டிபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலா் பா.சிவா கலந்துகொண்டு வீரா்கள் தோ்வை தொடக்கிவைத்தாா்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். தோ்வில் 18 வயதுக்கு உள்பட்ட, அதாவது 1.1.2004க்குப் பிறகு பிறந்தவா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, தோ்வுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் பிறப்புச் சான்றிதழ், ஆதாா் நகல் சரிபாா்க்கப்பட்டதும் வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில், ஆண்கள் அணிக்கு 15 பேரும், பெண்கள் அணிக்கு 15 பேரும் என மொத்தம் 30 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் காட்டாங்குளத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனா்.
நிகழ்ச்சியில் விளையாட்டு பயிற்சியாளா்கள் கோவிந்தராஜன், மோகனகிருஷ்ணன், செங்குட்டுவன், வினோத்குமாா், பாலாஜி, தியாகராஜன், சதீஷ்குமாா், லட்சுமணன், அப்துல்லா உள்பட பலா் கலந்து கொண்டனா். இணைச் செயலா் செல்வராஜ் நன்றி கூறினாா்.