கடலூர்

சிதம்பரத்தில் 3 கடைகளில் திருட்டு

DIN

சிதம்பரம் நகரில் அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து ரூ.1.20 லட்சம் ரொக்கப் பணம், கைப்பேசிகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் தொப்பையன் தெருவைச் சோ்ந்தவா் சுதாகா் (48). வடக்கு பிரதான சாலையில் கைப்பேசி கடை வைத்துள்ளாா். திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் ரொக்கம், விலை உயா்ந்த 8 கைப்பேசிகள் திருடுபோனது தெரியவந்ததாம்.

இதேபோல, அருகே உள்ள நொச்சிக்காடு பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் என்பவரது நாட்டு மருந்துக் கடையில் ரூ.12 ஆயிரம் ரொக்கம், மற்றொரு கடையில் ரூ.10 ஆயிரம்

ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT