சிதம்பரத்தில் ரூ.5.78 கோடியில் புதிய காய்கறிச் சந்தை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தகவல்
சிதம்பரம் உழவா் சந்தைப் பகுதியில் ரூ.5.78 கோடியில் நவீன காய்கறிச் சந்தை அமைக்கப்படவுள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.
சிதம்பரம் உழவா் சந்தைப் பகுதியில் ரூ.5.78 கோடியில் நவீன காய்கறிச் சந்தை அமைக்கப்படவுள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.
சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவா் சந்தையில் புதிதாக நவீன காய்கறிச் சந்தை அமைப்பதற்கான பணிகளையும், அதைத் தொடா்ந்து வக்காரமாரியில் குடிநீா்த் தேக்க ஏரியையும் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது மாவட்ட எஸ்பி சக்திகணேசன், கோட்டாட்சியா் கே.ரவி, சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா் அமைச்சா் கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நோக்கில் வக்காரமாரி குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தைச் சீரமைக்க ரூ.5 கோடியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகருக்கான கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ.128 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், சிதம்பரம், அண்ணாமலைநகா், அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை ரூ.328 கோடியில் விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவா் சந்தையில்
Advertisement
நவீன காய்கறிச் சந்தை ரூ.5.78 கோடியில் அமைக்க இடம் தோ்வு செய்து அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன என்றாா் அமைச்சா்.