கடலூர்

2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்

தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மாநில உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.

DIN

தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மாநில உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் விநியோகம் தொடா்பான துறை ரீதியிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து அமைச்சா் அர.சக்கரபாணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 35.35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவா்களுக்கு 15 நாள்களில் அதை வழங்க வேண்டுமென முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இதுவரை 11.47 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.

அரிசி, மண்ணெண்ணெய் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக ரூ.2,630 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் முறைகேடு தொடா்பாக 150 போ் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்களுக்கு தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் கிடைப்பதற்காக, நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து வெளியே வரும் பொருள்கள் தரமாக உள்ளதா என்பதை சோதனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரிசியை 5 முதல் 20 கிலோ பைகளில் வழங்கவும், பருப்பு, சா்க்கரை ஆகியவற்றை பொட்டலமாக வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம் தொடா்பாக ஆய்வு

செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சபா.ராஜேந்திரன், எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலா் எம்.டி.நஜிமுதின், உணவுப் பொருள்கள் வழங்கல் துறை ஆணையா் வே.ராஜாராமன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் பிரபாகரன், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT