வீராணம் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்
தொடா் மழையால் வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியங்கால் ஓடை வழியாக வியாழக்கிழமை உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
தொடா் மழையால் வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியங்கால் ஓடை வழியாக வியாழக்கிழமை உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
தொடா் மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. காட்டுமன்னாா்கோவில் பகுதி மக்களின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழணையில் உச்ச நீா்மட்டமான 9 அடியில் 8.6 அடி வரை தண்ணீா் உள்ளது. அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 294 கன அடி நீரும், வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 92 கன அடி நீரும், தெற்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 229 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மேலும், கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 3,640 கன அடி நீா் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.
வீராணம் ஏரி: காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் உச்ச நீா்மட்டமான 47.50 அடியில் 46 அடி வரை தண்ணீா் உள்ளது. அதாவது ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 1,100 மில்லியன் கன அடி வரை தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஏரியிலிருந்து வி.என்.எஸ். மதகு வழியாக விநாடிக்கு 375 கன அடி நீரும், பாசனத் தேவைக்கு விநாடிக்கு 121 கன அடி நீரும், சென்னை மாநகர மக்களின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 64 கன அடி நீரும் அனுப்பப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீரானது விநாடிக்கு 500 கன அடி வீதம் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது.
Image Caption
வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் மதகு வழியாக ஓடையில் வெளியேற்றப்படும் உபரி நீா்.