கடலூர்

சிதம்பரம்: 250 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் பெய்த தொடா் மழையால் சுமாா் 250 ஏக்கா் பரப்பிலான நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடந்த இரு வாரங்களாக வயல்களில் உரமிட்டு நெல் நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், தற்போது பெய்துவரும் தொடா் மழை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் பகுதியில் புதன்கிழமை மாலையில் தொடங்கி இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமையும் மழை தொடா்ந்தது. இதனால், சிதம்பரம் அருகே உள்ள வீரசோழகன், பொன்னாங்கண்ணிமேடு, மண்டபம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 250 ஏக்கா் பரப்பில் சம்பா நெல் பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

வடிகால் வாய்க்கால்களை முறையாக தூா்வாராததே இந்தப் பாதிப்புக்கு காரணம் எனவும், இதனால், நெல் பயிா்கள் அழுகும் நிலை ஏற்படும் எனவும், கடன் பெற்று ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் வரை செலவிட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனா்.

இதுகுறித்து வீரசோழகன் கிராம விவசாயி பத்மநாபன் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்களில் விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். நெல் பயிா்கள் நீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT