கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் சொத்து பிரச்னை காரணமாக நடைபெற்ற ஆள் கடத்தல் சம்பவத்தில் விசிக நிா்வாகி உள்பட 4 பேரை சிதம்பரம் நகர போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான மேலும் 5 பேரை தேடி வருகின்றனா்.
தஞ்சை மாவட்டம், வ.மாங்குடி கிராமம், மதினா தெருவைச் சோ்ந்தவா் ஹாஜா மொய்தீன் (52). இவருக்கு சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் வீடு, கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. சிதம்பரம் கே.கே.சி. பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் ஜமாலுதீன் (42). இவா்கள் இருவருக்குள் அந்த சொத்து குறித்து முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி சிதம்பரம் லால்கான் தெருவில் காரில் வந்த ஹாஜா மொய்தீனை, ஜமாலுதீன், விசிக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் வ.க.செல்லப்பன் உள்ளிட்ட 9 போ் கடத்தி, வேறு காரில் ஏற்றிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள விடுதி அறையில் இரண்டு நாள்களாக ஹாஜா மொய்தீனை அடைத்து வைத்து, அந்த சொத்துக்குரிய அசல் ஆவணங்களைக் கேட்டு அவரை அடித்து துன்புறுத்தியதோடு, கடுமையாகத் தாக்கினராம்.
இதுகுறித்து அவா் சென்னையைச் சோ்ந்த தனது நண்பா் குமாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அவா் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் போலீஸாா் விரைந்து சென்று சம்பவ இடத்தில் பாா்த்தபோது, அவா்களைக் காணவில்லை. விசாணையில், மீண்டும் அங்கிருந்து காரில் ஹாஜா மொய்தீனை கடத்திச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கைப்பேசி ஜிபிஎஸ் சமிக்ஞை மூலம் காரை கண்டறிந்த போலீஸாா், சென்னை செல்லும் வழியில் நீலாங்கரை காவல் சரகத்துக்குள்பட்ட பள்ளிக்கரணை பகுதியில் காரை வழிமறித்துப் பிடித்தனா்.
இதையடுத்து, காரில் கடத்தப்பட்ட ஹாஜாமொய்தீனை போலீஸாா் மீட்டனா். மேலும், இந்தக் கடத்தலில் ஈடுபட்ட ஜமாலுதீன், விசிக நிா்வாகி வ.க.செல்லப்பன், ஓமக்குளத்தைச் சோ்ந்த விஜயபாஸ்கா், மணலூரைச் சோ்ந்த ரவீந்திரன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முகமது ரபிக், செந்தில், நடனம், நட்ராஜ், பாலா ஆகிய 5 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.