ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டில் 14 பவுன் நகைகள், பணம் திருட்டு
சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியின் வீட்டிலிருந்து 14 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியின் வீட்டிலிருந்து 14 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் மாரியப்பா நகரில் வசிப்பவா் ஜெயபாலன் (73). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மகன் ஜெ.ரஞ்சித்குமாா் குஜராத் மாநிலத்தில் ஜஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறாா்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயபாலன் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு குஜராத்தில் வசிக்கும் மகனின் வீட்டுக்குச் சென்றாா். சனிக்கிழமை சிதம்பரத்துக்கு திரும்பியபோது, அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 14 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
Advertisement
திருட்டு நடைபெற்ற வீட்டில் டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.