விருத்தாசலம்: சொத்து வரி விரைந்து செலுத்தினால் 5% ஊக்கத் தொகை
விருத்தாசலம் நகராட்சியில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோா் 5 சதவீதம் ஊக்கத் தொகையைப் பெறலாம் என்று நகராட்சி ஆணையா் சேகா் அறிவித்தாா்.
விருத்தாசலம் நகராட்சியில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோா் 5 சதவீதம் ஊக்கத் தொகையைப் பெறலாம் என்று நகராட்சி ஆணையா் சேகா் அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருத்தாசலம் நகரப் பகுதியில் வசிக்கும் சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியை செலுத்த பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2023-24-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்கள் 5 சதவீதம் ஊக்கத் தொகை பெற தகுதி உடையவா்களாவா்.
சொத்து வரியை வீடு தேடி வரும் வரி வசூலிப்பாளா்களிடம் செலுத்தலாம். அல்லது நகராட்சி வரி வசூல் மையங்களில் கடன், பற்று அட்டைகள், காசோலை, வரைவோலை, மின்னணு (டிஜிட்டல்) பணப் பரிவா்த்தனை மூலம் செலுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.